இன்றைய திகதி


ஒருவன் எரிந்து காட்டினான்;

ஒருவன் நடந்து காட்டுகிறான்!

தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கு நன்றி
பிரெஞ்ச் வாழ் தமிழர்களுக்கு நன்றி
உலக தமிழ் மக்களுக்கு நன்றி
வீரநடை போட்டு சற்றும் தளராத கம்பீரத்தில்
ஈழத்திற்கான நீதியை பெற்றே திரும்பும் தீரத்தை
நமக்கெல்லாம் போதிக்க நடை பயணம் செய்து
விடுதலைக்கென வலம் வரும் சிவனந்தனுக்கு நன்றி!
அவரோடுன் நடைகொள்ளும் பிற உறவுகளுக்கும் நன்றி!

ஒருவன் எரிந்து காட்டினான்;
ஒருவன் நடந்து காட்டுகிறான்!

நாம் தான் அமைதியாக பார்த்து மட்டுமே
நம்மை யார் என்று காட்டுகிறோம்,
நம்மை எனில்; என்னை!

போகட்டும் வருத்தமில்லை -
நேற்றைக்கு முன் தினம் பார்த்தவன்;
நேற்று எரிந்து காட்டினான்.

நேற்றினை பார்த்தவன்;
இன்று நடந்து காட்டுகிறான்.

இன்றினை காண்பவர்;
நாளை எதனையும் செய்யலாம்.

விழிப்புணர்வென்பது உணர்ந்து வருவது தானே;
வரட்டும் வரட்டும்!!

வித்யாசாகர்

World newsSports

நேற்று இன்று நாளை


தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு... மேலும்

இளைய சமுதாயமே

உலகமெங்கும் வாழும் எம் தமிழ் இளையோர்களே எம் இனத்திற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பானவை. எமது தேசியத் தலைவரின் நன்மதிப்பை பெற்றவர்கள் நீங்களே. எமது தேசியத் தலைவரின்.... மேலும்

எங்கும் தமிழர்

வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு. நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் ...மேலும்